இந்தியாவில் மதமாற்ற தடை சட்டம் – உச்ச நீதிமன்றத்தில் மனு… மத்திய அரசு பதில்!
இந்தியாவில் மக்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று சட்டம் கூறுகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மதமாற்றம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மதமாற்றம்:
இந்தியா முழுவதும் அண்மை காலமாக மதமாற்று நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சில பகுதிகளில் கட்டாய மத மாற்றங்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.இது குறித்து வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்பாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில் மோசடியான முறையில் மதமாற்றங்கள் நடைபெறுவதை தடை செய்ய சட்டம் முன் வடிவு கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தார்.
தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. பொங்கல் பரிசு ரூ.1000 – பெறுவதற்கு ‘இது’ கட்டாயம்!!
Exams Daily Mobile App Download
இந்த மனுவுக்கு மத்திய அரசு வழிபாட்டு உரிமை என்பது மதமாற்ற உரிமையை உள்ளடக்கியது இல்லை என்று பதில் அளித்துள்ளது. மேலும் வற்புறுத்தல், மோசடி, போன்ற முறைகளில் நடைபெறும் மதமாற்றங்கள் மதமாற்ற உரிமை கிடையாது என்றும் கூறியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 9 மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளதையும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் மாநில அரசுகளின் கருத்துகள் உள்ளடக்கிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் இந்த வழக்கு விசாரணை டிச.5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.