திருப்பூரில் பொட்டானிக்கல் கார்டனுடன் கூடிய 17-வது சரணாலயம் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் கோடை காலத்திற்கு ஏற்ற சுற்றுலாத்தலமாக ஊட்டி விளங்குகிறது. இந்த நிலையில் தற்போது திருப்பூர் ஊட்டியை போன்று மாற இருப்பதாக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்
தமிழகத்தில் கோடை காலத்தில் குளுகுளுவென்று இருப்பதற்கு அனேகமானோர் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு சென்று மகிழ்வார்கள். மேலும் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் தேவைக்கேற்ப தங்குவதற்காக ஓட்டல், ரிசார்ட், காட்டேஜ் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஊட்டியில் தொட்டபெட்டா சிகரம், ஊட்டி ஏறி, நீலகிரி மலை ரயில், அவலாஞ்சி ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு தான் பொதுமக்கள் அதிகமாக சென்று வருகிறார்கள்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் திருப்பூர் ஊட்டியாக மாறப்போகிறது என தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இவர் கூறியிருப்பதாவது, திருப்பூரில் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் நஞ்சராயன் குளத்துக்கு வெளிநாட்டு பறவை இனங்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவைகள் வந்து செல்ல கூடியதாக இருக்கிறது.
ஆதாருடன் மின்வாரிய எண் இணைப்பு.. நவ.28 முதல் டிச.31 சிறப்பு முகாம் – அமைச்சர் அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
அதனால் அரசு இதனை 17வது சரணாலயமாக அறிவித்துள்ளது. அத்துடன் இதற்காக அரசு ரூ. 7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நந்தராயன் குளம் விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஊட்டியில் இருப்பது போன்று பொட்டானிக்கல் கார்டன் ஒன்று இங்கு அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். அத்துடன் ஊட்டியில் இருப்பது போல சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் தங்களின் பொழுதுபோக்கை மகிழ்ச்சியாக செலவிடும் வகையில் சிறந்த இடமாக மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார். அதன்படி மக்கள் ஊட்டிக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளுவது போல இனி திருப்பூருக்கும் சென்று மகிழ்வார்கள்.