மகளிர் சுய உதவி குழுவினருக்கு மின்னணு வர்த்தக தளம் அறிமுகம் – இனி பொருட்களை விற்பது ஈஸி!!
இந்தியாவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மகளிர் சுய உதவி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த நிலையில் இவர்களின் பொருட்களை மின்னணு முறையில் விற்பனை செய்வதற்கு வர்த்தக தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு
இந்தியாவில் மகளிர் சுய உதவி குழுக்கள் ஊரக மற்றும் கிராம பகுதிகளில் இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டது. மேலும் அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் அதிக லாபம் தரும் வகையில் சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் இவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும். ஆனால் இத்தகைய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்கள் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட கடைகள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழுவின் பொருட்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்ய மின்னணு வர்த்தக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த இணையதளம் கடந்த அக்டோபர் 28 தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் நவீன வசதி – நாளை முதல் தொடக்கம்! போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த இணையதளத்தை பயன்படுத்தி மகளிர் சுய உதவி குழுவின் பாரம்பரியமிக்க மற்றும் இயற்கையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த மின்னணு வர்த்தக இணையதளம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தின் வாயிலாக ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊழியர்களும், அரசு ஊழியர்களும் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.