தமிழக அரசு பேருந்துகளில் நவீன வசதி – நாளை முதல் தொடக்கம்! போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் இயங்கி வரும் பேருந்துகளில் GPS மூலம் பேருந்து நிறுத்தம் முன்னதாகவே ஒலிக்கப்படும் புதிய வசதி நாளை (நவ. 26) அறிமுகம் செய்யப்பட இருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
புதிய வசதி:
தமிழக அரசு சென்னை (எம்டிசி), விரைவுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 20 ஆயிரம் பேருந்துகள் இயங்கி வருகின்றனர். பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை மாநகர பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் நாளை (நவ. 26) தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம்!!
Exams Daily Mobile App Download
மேலும் பேருந்துகளில் அடுத்து வர இருக்கும் நிறுத்தம் குறித்து தமிழ், ஆங்கில மொழிகளில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். அது மட்டுமில்லாமல் 300 மீட்டருக்கு முன்னதாகவே பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்த தகவல் பேருந்தில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படுவதால் பயணிகள் தங்களுடைய நிறுத்தத்தை சரியாக கண்டறிந்து இறங்கலாம். மேலும் இந்த வசதி மூலம் பார்வையற்றவர்களுக்கும், எழுத படிக்க தெரியாதவர்களுக்கும், சென்னைக்கு புதிதாக வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.