தமிழகத்தில் சிறுபான்மையினர்களுக்கு ரூ. 10 லட்சம் உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் தகவல்!
தமிழகத்தில் சிறுபான்மையினர்களுக்கு உதவும் வகையில் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் உதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் தொழில் மற்றும் கல்விக்காக கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடன் உதவி:
தமிழகத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சோ்ந்த சிறுபான்மையினர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் முன்னுரிமைகளையும் அளித்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு கடனுதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதில் சிறுபான்மையினர்களுக்கு இந்த கழகத்தின் கீழ் தொழில் மற்றும் கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் திட்டம் சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்கள் கடன் பெற விரும்பினால் அவர்களது வருமானம் 1,20,000க்குள் இருக்க வேண்டும். அதுவே கிராம புறமாக இருந்தால் வருமானம் 98,000 க்குள் இருக்க வேண்டும். அடுத்ததாக 2ம் திட்டத்தில் குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இத்தகைய திட்டங்களில் குறைந்த பட்சமாக 4% வட்டியில் ரூ. 10 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் உதவியை பெற விரும்பும் சிறுபான்மையினர் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு 9840984176 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.