தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!
இந்தியாவில் மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
இந்தியாவில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2021-2022 ம் கல்வியாண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த உதவித்தொகை பெற 8ம் வகுப்பு மாணவர்கள் என்எம்எம்எஸ் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வை எழுதுவதற்கான விண்ணப்பபதிவு கடந்த வாரம் நவ.15ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்கிற்கு டெஸ்லாவால் உருவாகி இருக்கும் புதிய சிக்கல்…மின்சார கார்களை திரும்பப் பெற முடிவு!
Follow our Instagram for more Latest Updates
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.