TCS நிறுவனத்தை தொடர்ந்து Infosys வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – இனி Work From Home-க்கு No!
TCS நிறுவனத்தை தொடர்ந்து Infosys நிறுவனமும் Work From Home ஊழியர்களை அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இது ஊழியர்களிடையே அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Work From Home:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் (Work From Home) திட்டத்தை வழங்கியது. இது ஊழியர்களுக்கும் பெரும் வசதியாக இருந்துவந்தது. இதனால் நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்பாடாமல் தடுக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையிலும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படாமல் இருந்தனர். சமீபத்தில் TCS எனும் தனியார் நிறுவனம் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்ததை தொடர்ந்து தற்போது Infosys நிறுவனமும் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ளது. ஊழியர்களுக்கு தேவையான சலுகைகளை செய்து தருவதாக இந்நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது பல IT நிறுவனங்கள் Hybrid மாடலில் பணி செய்யும் முறையை அறிமுகப்படுத்தி வருகிறது. அதாவது ஒரு வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் அலுவலத்தில் இருந்தும் மீதமுள்ள நாட்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் முறையும் தற்போது IT நிறுவனங்களால் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.