ரேஷன் கடைகளில் தரம் குறைந்த துவரம் பருப்பு விநியோகம் – உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
தமிழகத்திற்கு தரம் குறைந்த துவரம் பருப்பை வழங்கிய அதே நிறுவனத்திற்கு மத்திய அரசு உள் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்றம்:
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. இதில் பல பொருட்கள் தரம் குறைந்து இருந்தாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
Follow our Instagram for more Latest Updates
அதில் மக்களுக்கு அதிக தேவையுள்ள துவரம் பருப்பு மோசமான நிலையில் இருந்ததாகவும் கூறினர். இது குறித்து விசாரிக்கப்பட்ட போது கேந்திரிய பந்தர் என்ற நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தரம் குறைந்த துவரம் பருப்பை வழங்கியது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அதே நிறுவனத்திடம் தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்பு உள் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. 1 மாதம் கால அவகாசம் கேட்டு தனியார் பள்ளிகள் கோரிக்கை!
Exams Daily Mobile App Download
இதனை கண்டித்து ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில் தமிழக கிடங்குகளில் உள்ள பருப்புகளை சேகரித்து அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் இன்னும் இரண்டு வாரங்களில் இந்த மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.