பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ள அடிதடி.. அதிரடியாக போட்டியாளரை வெளியே அனுப்பிய சேனல் நிர்வாகம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அதிக அளவிலான சர்ச்சையான விஷயங்கள் நடந்து வருகிறது. தற்போது அப்படி நடந்த ஒரு விஷயத்தின் காரணமாக ஒரு போட்டியாளரை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.
பிக் பாஸ்:
முதன்முதலில் வெளிநாடுகளில் பிக் பிரதர் நிகழ்ச்சியை இந்தியாவில் இந்தியில் தான் அறிமுகப்படுத்தினார்கள். அப்போதைய காலகட்டத்தில் மக்களுக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் புதியதாக இருந்தது. பல்வேறு துறைகளையும் சார்ந்த பிரபலங்கள் ஒரே வீட்டினில் இருப்பதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி மக்களுக்கு எழுந்தது. வெளி உலகத்தின் எந்த வித தொடர்பும் இல்லாமல் கொடுக்கப்பட்ட டாஸ்குகளை சிறப்பாக செய்வதில் தான் தனித்திறமை இருக்கிறது என்பது சில நாட்களிலேயே மக்கள் புரிந்து கொண்டனர்.
சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா – அதுவும் இந்த சேனலா? ரசிகர்கள் உற்சாகம்!
Exams Daily Mobile App Download
தற்போது இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி 16 வது சீசனை அடைந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து சல்மான் கான் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை விதிமீறல் செய்த பலரையும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய நிலையில், தற்போதைய சீசனில் அர்ச்சனா கௌதம் என்பவர் சிவ் தாக்கரே என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதலில் அடிதடியில் இறங்கியுள்ளார். இதனால் பிக் பாஸ் அந்த போட்டியாளரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.