கதிர், முல்லை வந்த சந்தோசத்தில் இருக்கும் குடும்பத்தினர்.. சண்டையை ஆரம்பித்த பார்வதி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் வீட்டிற்கு வந்ததை நினைத்து குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். பின் கதிர் போட்டியில் வெற்றி பெற்ற 10 லட்சம் ரூபாயை தனத்திடம் கொடுக்கிறார். பின் பார்வதி முல்லையை ஒன்றாக இருக்க வேண்டாம் என சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் போட்டியில் வெற்றி பெற்றதாக மூர்த்தி சொல்ல, தனம் அதை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் கதிர் நாங்க நான்கு பேரும் சேர்ந்து தான் பரிசை வாங்குனோம் ரொம்ப சந்தோசமாக இருந்தது என சொல்கிறார். பின் கண்ணன் நானும் வந்திருப்பேன் என சொல்கிறார். பின் தனம் எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என சொல்ல, மூர்த்தி நான் குளித்துவிட்டு வருகிறேன் என சொல்கிறார். முல்லை சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இன்று எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என சொல்ல, கதிர் அப்போது மூர்த்தி தனத்தை நிற்க வைத்து பரிசு தொகையை கொடுக்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
தனம் பணம் எல்லாம் வேண்டாம் என சொல்ல, மீனா எவ்வளவு பணம் என கேட்கிறார். அப்போது ஜீவா 10 லட்சம் என சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின் மீனா எங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம், நானும் ஜீவாவும் கூட வந்திருப்போம் என சொல்கிறார். பின் கதிர் எப்படி அண்ணா உனக்கு எதுவும் தெரியாது என நினைத்தேன் என கண்ணன் சொல்ல, எல்லாம் முல்லை செய்தது தான் என கதிர் சொல்கிறார். மூர்த்தி பணம் வேண்டாம் என சொல்ல, நீங்க சொன்னதை செய்ய வேண்டும் என சொல்லி தான எங்களை வளர்த்தீங்கள் அதனால் நான் பணத்தை கொடுத்துவிட்டு வருவது தான் சரியானது என கதிர் சொல்கிறார்.
பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட கதிர் எத்தனை நாள் ஆகிவிட்டது என வருத்தப்பட்டு பேசுகிறார். மூர்த்தி எல்லாருக்கும் சாப்பாடு பிசைந்து கொடுக்கிறார். கதிர் மூர்த்திக்கு ஊட்டிவிட, ஜீவாவும் மூர்த்திக்கு ஊட்டி சந்தோசப்படுகின்றனர். பின் முருகன் வந்து அண்ணன் தம்பி பாசத்தை பார்த்து சந்தோசப்படுகிறார். ஆனால் முல்லை அம்மாவிற்கு அது பிடிக்காமல் இருக்கிறது. முருகன் என்ன கோவமாக இருக்கிறாய் என கேட்க முல்லை அம்மா இதெல்லாம் நன்றாக இருக்கிறதா என கேட்கிறார். பின் முல்லை எல்லாருடனும் சந்தோசமாக இருக்க, அப்போது பார்வதி எவ்வளவு பிரச்சனை நடந்தது நீ என்ன இப்படி இருக்கிறாய் என கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
உனக்கு செலவு செய்த பணத்தை கொடுத்தால் தான் வருவேன் என மாப்பிள்ளை சபதம் போட்டு வந்தார் இப்போது பணத்தை கொடுக்காமல் வரலாமா என கேட்க, முல்லை பணத்தை கொடுத்துவிட்டார் என சொல்கிறார். பார்வதி அப்போ பணம் வாங்கி கொண்டு தான் உங்களை சேர்த்து கொண்டார்களா என கேட்கிறார். அதற்கு முல்லை நாங்க பணத்தை கொடுத்தோம் ஆனால் யாரும் வாங்கவில்லை என சொல்ல, பின் முல்லையின் அம்மா, நீங்க பணம் கொடுத்தது, மீனாவின் அப்பாவிற்கும் , தனத்தின் அம்மாவிற்கும் எப்படி தெரியும் என கேட்கிறார். அதற்கு தனம் சண்டை வேண்டாம் என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.