விஜய் டிவி சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – ஷாக்கில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் ப்ரைம் டைம் இல்லாமல் டெலிகாஸ்ட் செய்யப்படும் சீரியலான “நம்ம வீட்டு பொண்ணு” தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல நடிகை தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக களமிறங்கும் நடிகை குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
நடிகை மாற்றம்:
தமிழ் சின்னத்திரையில் சீரியல் என்பது மக்களின் அடிப்படை பொழுது போக்கு அம்சமாக மாறிவிட்டது. அந்த வகையில் சீரியலில் நடிக்கும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அவை மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு காலை முதல் மாலை வரை பல சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும், விஜய் டிவி சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ப்ரைம் டைம் இல்லாத சீரியல் தான் “நம்ம வீட்டு பொண்ணு”.
Exams Daily Mobile App Download
இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரமான விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நித்யா ரவீந்தர் தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது நடிகை ரேவதி சங்கர் களமிறங்கி இருக்கிறார். இவர் தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இனி நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் ரேவதி சங்கர் நடிப்பார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல சீரியலில் முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.