தமிழக அரசு பள்ளிகளுக்கு STEM திட்டத்தின் மூலம் சூப்பர் அறிவிப்பு – அறிவுறுத்தல்கள் வெளியீடு!
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளையும் செய்து வரும் நிலையில், தற்போது புதிதாக முக்கிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.
STEM திட்டம்:
தமிழக பள்ளி மாணவர்களின் நலனிற்காக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அவர்களின் கல்வி வாழ்வில் சிறக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மாணவர்களுக்கு கல்விக்கு உதவும் வகையில் உதவித்தொகைகளை அளித்து வரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் அவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறது.
உங்கள் ஆதார் கார்டில் இது சரியா இருக்கா.. Check பண்ணிட்டு உடனே மாத்துங்க – இல்லனா ரிஸ்க் தான்!
Exams Daily Mobile App Download
தற்போது அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனையை அறிவியலின் பக்கம் திருப்பி, புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் தொடங்கப்பட்ட STEM திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, STEM திட்டத்தில் 20 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு 1 தன்னார்வலர் நியமிக்கப்படுவதாகவும், அவர் ஒவ்வொரு மாதமும் 1 பள்ளி என்ற வீதம் 30 அறிவியல் சோதனைகளை செய்து, அவற்றை STEM செயலியில் பதிவேற்றம் செய்வார்.அவருக்கு அரசு சார்பில் ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.