8 லட்சம் வேலைவாய்ப்புகள்.. ரூ.9000 உதவித்தொகை.. ஹிமாச்சல் தேர்தலில் அனல் பறக்கும் வாக்குறுதிகள்!
ஹிமாச்சல் மாநிலத்தில் இந்த மாதம் நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் தங்களது வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றனர்.
தேர்தல் களம்:
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்காலம் முடிந்து, தற்போது இந்த மாதம் 12ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தற்போது அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். காங்கிரஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த நிலையில், இன்று பாஜக தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
காங்கிரஸ் மற்றும் பாஜகவின் ஆட்சியில் நடந்துள்ள பலவற்றையும் குற்ற சாட்டுகளாக மக்கள் முன்வைத்துள்ளனர். இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில், தங்களது வாக்குறுதிகளை அளித்திருந்தனர். பாஜகவின் வாக்குறுதியில், மாநிலத்தில் புதிதாக 8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாகவும், 6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவசமாக மிதிவண்டி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஷார் மக்களே!! தமிழகத்தில் நவ.8 பல பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களின் சம்பளம் வழங்கும் முறைகளை மாற்றி அமைக்க உள்ளதாகவும், இதைத்தவிர தற்போது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 பிரதம மந்திரி கிஷன் திட்டத்தின் மூலம் அளித்து வரும் தொகையை உயர்த்தி ஆண்டிற்கு கூடுதலாக ரூ.3,000 மேலும் அளிக்கப்படும் என்றும், இத்திட்டத்தில் 10 லட்சம் விவசாயிகள் கூடுதலாக இணைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.