தமிழகத்தில் இனி சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் சில மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அம்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சனிக்கிழமை விடுமுறை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவ மழையானது டிசம்பர் வரை நீடிக்கும். அந்த வகையில் நடப்பு ஆண்டு கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக தொடரும் இந்த மழையால் சென்னை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த தொடர் மழையின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலப்பதால் நோய் தொற்று பரவும் அச்சமும் நிலவுகிறது.
தமிழகத்தில் இனி LKG & UKG வகுப்புகள் தேவையில்லை – பெற்றோர்கள் கருத்து!
Follow our Instagram for more Latest Updates
இத்தகைய சூழலில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வண்ணம் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கற்றலில் இடைவெளி ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.