மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 15% அகவிலை நிவாரணம் உயர்வு! அரசு ஒப்புதல்!
இந்தியாவில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த மாதம் 4%அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது பங்களிப்பு ஓய்வூதிய ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலை நிவாரணத்தை உயர்த்தியுள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் அரசு அகவிலைப்படியை 4 % உயர்த்தியது. தீபாவளி பண்டிகை நேரத்தில் வெளியான இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 7 – வது ஊதியக்குழு பரிந்துரையின் படி அகவிலைப்படி 38% ஆக தற்போது அதிகரித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஜூலை 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவித்தது.
Exams Daily Mobile App Download
மத்திய அரசை தொடர்ந்து ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களும் தங்களது ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை அளித்தது. அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு பங்களிப்பு பென்ஷன் திட்ட ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 15% உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த அக்.31ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் அகவிலை நிவாரணத் தொகை அடிப்படை கருணைத் தொகை 381 %ல் இருந்து 396% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியதாரர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தொகை அதிகரிக்கும். மேலும் இவை கடந்த ஜூலை மாத தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கடந்த மாதங்களுக்கான அகவிலை நிவாரண நிலுவைத்தொகையும் கிடைக்கும் என்றும் தகவல் வந்துள்ளது.