அயப்பாக்கம் ஊராட்சி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் – விரைவில் புதிய திட்டம்!
மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தமிழக அரசு செயல்பட்டு வரும் நிலையில், தற்போது மக்களின் கோரிக்கைக்கு சுகாதார துறை அமைச்சர் உடனடியாக பச்சை கோடி காட்டியுள்ளார்.
புதிய திட்டம்:
தமிழகத்தில் தற்போது சுகாதார துறை அமைச்சர் பதவியில் மா.சுப்பிரமணியன் அவர்கள் உள்ளார்கள். பதவி ஏற்றத்தில் இருந்து கொரோனா மற்றும் நோய் பரவலுக்கான கட்டுப்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், உள்ளாட்சி தினர் தமிழகத்தின் நவம்பர் 2ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கம் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்துள்ளது.
இனி வாட்ஸ் அப்பில் இந்த ஆப்சன் கிடையாது – மெட்டா நிறுவனம் திட்ட வட்டம்!
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
இந்த கிராம சபை கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய ஊராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, கிராமத்தலைவர் சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள அயப்பாக்கம் ஊராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர், இதற்கான திட்டம் தமிழக அரசிடம் உள்ளதாகவும், அடுத்த தேர்தலுக்குள் இது அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.