ஐடி ஊழியர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி.. தடாலடியாக குறைக்கப்பட்ட சம்பளம் – இன்போசிஸ் முடிவு!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வரும் மாதங்களில் ஊழியர்கள் வெளியேற்றம் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஊதியம்:
தற்போது உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்ற துறைகளை தொடர்ந்து ஐடி ஊழியர்களையும் பெரிதும் பாதித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்திய ஐடி நிறுவனங்கள் நிலை மோசமாக வாய்ப்புள்ளது. ஏனெனில் பெரும்பாலான வர்த்தகம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கிடையே தான் நடைபெற்று வருகிறது. அந்த நாடுகளில் நிலவும் பொருளாதார சரிவு இந்திய ஊழியர்களை பாதிக்கும்.ஏற்கனவே ஐடி ஊழியர்கள் மூன் லைட்டிங் பிரச்சனையால் வேலை இழப்பிற்கு ஆளாகியுள்ளனர் .
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனம் பணியாளர்களுக்கு வழங்கும் வேரியபிள் பே தொகையில் 60 சதவீதமாக குறைத்து அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வேரியபிள் பே என்பது ஒரு ஊழியரின் சம்பளத்தில் 10 முதல் 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை 60% குறைக்கவுள்ளதாகவும், மேலும் இது BPM பிரிவினருக்கு மட்டுமே என்றும் தகவல் வந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் ஊழியர்களின் சம்பளம் குறையும் என்பதால் இது ஊழியர்கள் வெளியேற்றத்திற்கு வாய்ப்பளிக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 28.4 சதவிகிதமாக இருந்தது. தற்போது தான் இந்த விகிதம் குறைந்துள்ளது. இதற்கு மத்தியில் வேரியபிள் பே குறைந்தால் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் மீண்டும் உயரும் என கூறப்படுகிறது.