தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த பணியிடங்களில் சேர தகுதி வாய்ந்த பலர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடத்தப்படவில்லை. மேலும் தேர்வு வாரியம் இது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனால் தமிழகத்தில் உள்ள 167 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 51 பாலிடெக்னிக்குகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் சுமார் 10,000 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் கடந்த 12 ஆண்டுகளாக இந்த பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரே ஒரு முறை 2016 ஆம் ஆண்டு 1020 பணியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்டன. அதனால் இந்த உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரம்பலூர் மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் மனு தாக்கல் செய்தனர்.
2023 ஆம் ஆண்டு வரை புதிய வேலைவாய்ப்புகள் இல்லை – ஆப்பிள் நிறுவனம் அதிரடி!
Follow our Instagram for more Latest Updates
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர் தரப்பில் இருந்து பேசிய வழக்கறிஞர் ஜி.சங்கரன் கூறுகையில், ஆண்டுக்கணக்கில் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இது குறித்து பேசிய நீதிபதி, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.