திருமணத்திற்கு முன்பே மணமகனிடம் இதை சொல்ல வேண்டும் – மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவு!
திருமணத்திற்கு பிறகு பெண்கள் தன் கணவன் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இதனால் சில குடும்பங்களில் அவ்வப்போது சில பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் மும்பை உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருமணம்:
இந்தியாவில் பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். சில குடும்பங்களில் அந்த பெண்ணிற்கு உதவியாக கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் இருந்து வருகிறார்கள். சில குடும்பங்களில் அதற்கு எதிர்மறையாக அந்த பெண் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்யும் நிலைக்கு ஆளாகிறார்கள். இதனாலே பல குடும்பங்களில் பிரச்சனைகள் எழுகிறது.
Exams Daily Mobile App Download
தற்போதைய நவீன உலகில் கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்கின்றனர். இந்த நேரத்தில் ஒரு பெண் அலுவலகம் முடித்து வந்து வீட்டு வேலைகளையும் செய்வது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் மும்பை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது வீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே அதனை மணமகனுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
கடந்த 2005 ஆம் ஆண்டு குடும்ப நல நீதிமன்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் திருமணத்தை ரத்து செய்தது. இதனை எதிர்த்து அந்த ராணுவ அதிகாரியின் மனைவி வழக்கை மேல்முறையீடு செய்தார். தற்போது இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.