திருப்பதி செல்லவிருக்கும் பக்தர்கள் கவனத்திற்கு – இந்த தேதிகளில் தரிசனம் கிடையாது! தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதியில் கடந்த மாதம் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தற்போது பக்தர்கள் வழக்கம் போல சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அக்.24, 25ம் தேதிகளில் நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதியில் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு நடப்பு ஆண்டு பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு மக்கள் எளிதாக பயணித்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் மாநில அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா முடிவடைந்த நிலையில் தற்போது வரவிருக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை மொத்தமாக 12 மணி நேரம் கோயில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு அக்டோபர் 24, 25ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பின் காரணமாக 24ம் தேதியன்று பரிந்துரை கடிதங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது அதே போல 24ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 23ம் தேதியன்று பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணம், ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடை தரிசனம் ஆகியவற்றை முன்னிட்டு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினமும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.