8 ஆண்டுகளாக நீடிக்கும் காத்திருப்பு .. உடனடி பணி நியமன கோரிக்கை – TET ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!
கொல்கத்தாவில் கடந்த 2014ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதனால் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பணி நியமன கோரிக்கை:
2014 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு 20,000 பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது. இந்த பணியிடங்களில் இதுவரை 12,500 பேருக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு 2021ம் ஆண்டு 2-வது சுற்று நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட நிலையிலும், அதற்கான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. பல முறை இந்த ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால், இவர்களுக்கு உறுதியான பதில்கள் இதுவரையிலும் அளிக்கப்படவில்லை. இதனால், 2014 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அக்டோபர் 17 ம் தேதி முதல் கொல்கத்தாவின் கருணாமோயியில் உள்ள மேற்கு வங்க தொடக்கக் கல்வி வாரியத்தின் அலுவலகத்தின் முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் உடனடியாக தங்களுக்கு பணி நியமனம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த மெசேஜ் வந்தா Reply பண்ணாதீங்க – எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திர பாபு!
Exams Daily Mobile App Download
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய மூவாயிரம் பேர் போராட்ட களத்தில் தற்போது உள்ளனர். தகுதியற்றவர்களுக்கும், லஞ்சம் கொடுத்தவர்களுக்கும் பணி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். தங்களின் 8 ஆண்டு கால காத்திருப்பிற்கு பலனாக உடனடியாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளனர்.