இந்த மெசேஜ் வந்தா Reply பண்ணாதீங்க – எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திர பாபு!
தற்போதைய கால கட்டத்தில் அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளதால் ஆன்லைன் வாயிலாக முறைகேடுகள் ஏற்படுவது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இதனை மட்டும் செய்யவே செய்யாதீர்கள் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஆன்லைன் மோசடி:
தற்போதைய கால கட்டத்தில் அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. அதனால் ஆன்லைன் முறையில் முறைகேடுகள் ஏற்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் மோசடிகளை நிகழ்த்த தினமும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக பொதுமக்களிடம் இருந்து வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை பெற அதிகாரி போன்று தொடர்பு கொள்கின்றனர். பொதுமக்களும் இதனை நம்பி ஏமாந்து தங்களின் விபரங்களை கொடுத்து தங்களின் பணத்தை இழந்து விடுகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அதனால் பொது மக்களிடம் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் குறிப்பாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வங்கிகளும் தாங்கள் வங்கி தொடர்பான தகவல்களை கேட்பதில்லை. தங்களின் வாடிக்கையாளர்களுக்கு யாரிடமும் வங்கி தொடர்பான விபரங்களை பகிரக் கூடாது என அறிவுறுத்தி வருகிறது.
மக்களே அலர்ட்டா இருங்க.. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை!
Exams Daily Mobile App Download
ஆனாலும் ஆன்லைன் மோசடிகள் நிகழ்வது அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுமக்களுக்கு மெசேஜ் மூலமாக மின் துண்டிக்கப்படும் என செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு நீங்கள் பதிலளித்தால் உங்களின் விவரங்கள் அனைத்தும் மோசடிதாரர்கள் திருடி விடுவார்கள். அதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற தேவையில்லாத மெசேஜ்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.