மக்களே அலர்ட்டா இருங்க.. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (அக். 20) முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தமிழகத்தில் ஒரு வாரமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று (அக். 20) காலை அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23 ஆம் தேதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
Follow our Instagram for more Latest Updates
அதன் பின் வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வருகிற அக். 24 ஆம் தேதி வலுபெறக்கூடும்.அதன் பின் 25 ஆம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகர கூடும். அதனால் இன்று (அக். 20) முதல் 24 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தீபாவளி அன்று கூடுதல் நேரத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
மேலும் கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, மதுரை, நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, திண்டுக்கல், தஞ்சாவூர், தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், சேலம், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.