தமிழகத்தில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் – மாநகராட்சி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் சமீப காலமாக கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் நபர்கள் உயிரிழப்பது அதிகமாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது போன்ற நிகழ்வை தடுக்க சென்னை மாநகராட்சி தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கழிவுநீர் தொட்டி:
நம் வீடுகளில் சில நேரம் கழிவுநீர் தொட்டியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நீர் உரிய பாதையில் செல்லாமல் தேக்கமடைந்து விடுகிறது. இது போன்ற சூழலில் தொட்டியில் என்ன கோளாறு என்பதை கண்டறிந்து அதனை சரி செய்ய வீட்டின் உரிமையாளர்கள் துப்புரவு பணியாளர்களை நாடுகின்றனர். தனி நபர் ஒருவரை அழைத்து கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கின்றனர். கழிவுநீர் தொட்டியில் இறங்கும் அந்த நபர் விஷ வாயு கசிவால் பாதிக்கப்படும் சம்பவங்களும் அதிகம் நிகழ்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த வாயுவை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு சில நேரங்களில் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இது போன்ற நிகழ்வை தடுக்க தற்போது சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, கழிவு நீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய எந்த ஒரு தனி நபரை நியமிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பொதுமக்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிகளில் புதிய மாற்றம் – அரசு எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
இதனை மீறி தனி நபரை நியமித்து சுத்தம் செய்யும் போது அவருக்கு மரணம் ஏற்பட்டால் அதற்கு வீட்டின் உரிமையாளரே பொறுப்பாவார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அந்த நபரின் இறப்புக்கு உரிமையாளர் ரூ.15 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை மீறி ஒருவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபர் நியமிக்கப்படுவது தெரிய வந்தால் 14420 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.