பொதுமக்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிகளில் புதிய மாற்றம் – அரசு எச்சரிக்கை!

0
பொதுமக்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிகளில் புதிய மாற்றம் - அரசு எச்சரிக்கை!
பொதுமக்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிகளில் புதிய மாற்றம் - அரசு எச்சரிக்கை!
பொதுமக்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிகளில் புதிய மாற்றம் – அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்:

தமிழகத்தில் உள்ள சாலைகளில் தினமும் எதாவது ஒரு விபத்து ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. மக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்காமல் இருப்பதால் தான் விபத்துகள் அதிகமாக ஏற்படுகிறது. அதனால் போக்குவரத்து விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த 6 மாதங்களில் 3,85,068 வழக்குகளுக்கு அபராதம் செலுத்தப்பட்டு விதிக்கப்பட்டு ரூ.6,01,45,160 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில் தமிழகத்தில் போக்குவரத்து விபத்துகளை தவிர்க்க சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் ஆம்புலன்சிற்கு வழி விடாத எல்லா வாகனங்களுக்கும் இந்த அபராதத் தொகை பொருந்தும். அதுமட்டுமில்லாமல் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறமையான மாணவர்களை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சி – 258.9 கோடி செலவில் புதிய திட்டம்!

Exams Daily Mobile App Download

மேலும் தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், சாலைகளில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி அவருடன் பயணிக்கும் நபருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும் என புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ரேஸிங் செய்யும் வகையில் வண்டி ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!