பள்ளிகளின் பெயர்களில் இருந்து ‘இதை’ நீக்க வேண்டும் – கல்வித்துறை உத்தரவு!
கேரளா மாநிலத்தில் இனி தனித்தனியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி என்று இருக்க கூடாது என்று அரசின் உத்தரவை தொடர்ந்து தற்போது பள்ளிகளின் பெயர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கல்வித்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
கல்வித்துறை உத்தரவு:
மாணவர்கள் மத்தியில் பாலின பாகுபாடு என்பது இருக்க கூடாது என்று கேரளா அரசு ஒரு புதிய முயற்சியை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் தற்போது 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் என மொத்தம் 444 தனி பாலர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. தனி பாலர் பள்ளிகள் இனி கேரளா மாநிலத்தில் செயல்பட கூடாது என்று கேரள குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது.
தமிழக மாணவர்களுக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த பள்ளிக்கல்வித்துறை – அரசின் சூப்பர் ஏற்பாடு!
Exams Daily Mobile App Download
இருபாலர் பள்ளிகளில் குழந்தைகள் பயில்வதால் அவர்களுக்குள் பாலின பாகுபாடு என்ற எண்ணம் இருக்காது என்று கேரள குழந்தைகள் நல ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவின் படி, அடுத்த கல்வி ஆண்டு முதல் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளும் இருபாலர் பள்ளிகளாக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாநிலத்தில் உள்ள பொதுப் பள்ளிகளின் பெயர்களில் இருந்து ‘பெண்கள்’ மற்றும் ‘ஆண்கள்’ என்ற பெயர்களை நீக்க பொதுக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இருபாலர் பள்ளிகளுக்கு இனிமேல் ‘பெண்கள் பள்ளி’, ‘ஆண்கள் பள்ளி’ என்று பெயர் வைக்கக் கூடாது என்று கேரள குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகளின் பெயர்களில் ‘பெண்கள்’ அல்லது ‘ஆண்கள்’ என்று பெயர்கள் உள்ளதாகவும், இதனால் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் பொதுக் கல்வித் துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அத்தகைய பள்ளிகள் தங்கள் பெயர்களை கல்வி அதிகாரியின் அனுமதியுடன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கேற்ப அனைத்து அதிகாரபூர்வ ஆவணங்கள் மற்றும் பெயர் பலகைகள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
அருமையான செயல் இதுபோல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்