தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு வர 16,888 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகிற அக். 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் தமிழக மக்களால் இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் வேலைக்காக சென்றவர்களும், படிப்பிற்காக சென்றவர்களும் தீபாவளியை தங்களது குடும்பத்துடன் கொண்டாட நினைப்பார்கள். அதுவும் இந்த ஆண்டு சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கிறது.
அதனால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு முன்னதாகவே ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்டதால் தற்போது ரயில்களில் டிக்கெட் இல்லாமல் காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கிறது. அதனை தொடர்ந்து, தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தியது. அதில் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
PF கணக்கில் உள்ள தொகையை எடுக்க போறீங்களா? – 1 நேரத்தில் பணம் கிடைக்கும்! வழிகள் இதோ!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னையில் அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. மேலும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மக்களின் வசதிக்காக இந்த பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்