தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு? தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்வரிடம் கோரிக்கை!
சில நாட்களுக்கு முன்பு தான் மத்திய அரசு, தனது அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
தற்போதைய சூழலில் ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் ஏறிய வண்ணமே உள்ளது. சாமானிய மக்களும் இதனால் பெரிதும் திண்டாடி வருகின்றனர். மறுபுறம் அரசு ஊழியர்கள் இந்த விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க அரசு அகவிலைப்படியை வருடாவருடம் உயர்த்தி வருகிறது.
சமீபத்தில் மத்திய அரசு 03.10.2022 முதல் 34 சதவீத அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன் ஆகியோர் இணைந்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
மாதம் ரூ.40,000 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
Exams Daily Mobile App Download
அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டதை போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வேறு வருவதால் காலதாமதமின்றி உடனடியாக இது சம்மந்தபட்ட முடிவை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.’
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்