அதிகரிக்கும் ஆன்லைன் பண மோசடி! இதை மறந்தும் கூட செய்யயாதீங்க! SBI எச்சரிக்கை!
இந்தியாவில் ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. உங்களுக்கே தெரியாமல் உங்களது வங்கி சார்ந்த விவரங்களை அறிந்து கொண்டு பணத்தை கையாடல் செய்து விடுகின்றனர். இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பண மோசடி:
இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. தற்போது மக்கள் பணம் அனுப்ப டெபாசிட் செய்ய நீண்ட நேரம் வங்கியில் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆன்லைன் மூலம் அல்லது பண பரிமாற்ற செயலிகள் (G PAY, PAYTM, PHONEPE) மூலம் எந்த நேரத்திலும் பணத்தை அனுப்பலாம். இந்த நிலையில் ஆன்லைன் மூலம் பண மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணம் கையாடல் செய்யும் நபர்கள் வங்கி ஊழியர்களை போல வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விவரங்களை கைப்பற்றி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். தற்போது ‘சோவா’ என்ற வைரஸ் இந்தியாவில் ஊடுருவி வருவதாக இந்திய கணினி அவசர கால மீட்பு குழு எச்சரித்துள்ளது. இந்த தொழில்நுட்ப வைரஸானது உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்களை நேரடியாக ஹேக்கர்களுக்கு தெரிவிப்பதாக கூறியுள்ளது. அதனால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பண மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
இது குறித்து எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தெரியாத நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை ஏற்க வேண்டாம். மேலும் மொபைல் SMS, சமூக வலைத்தளங்களில் வரும் லிங்குகளை தேவையின்றி கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் மொபைல் எண்ணுக்கு பரிசுத்தொகை கிடைத்துள்ளது என்று ஏதேனும் அழைப்புகள் வந்தால் அதனை நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்