ராதிகா கழுத்தில் தாலி கட்டிய கோபி..சாபம் விட்ட ஈஸ்வரி.. கதறி அழும் குடும்பம் – பாக்கியலட்சுமி ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்ட போக, ஈஸ்வரி இனியா உடன் திருமணத்தை தடுக்க வருகிறார். இந்நிலையில் கோபி திருமணம் நடக்குமா என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பல சுவாரசியமான திருப்பங்கள் வர இருக்கிறது. கோபி ராதிகா திருமண மேடை வரை வந்துவிட, ராமமூர்த்தி திருமணத்தை நிறுத்த பல முயற்சிகளை செய்ய, ஆனாலும் அவர்களின் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் ராமமூர்த்தி கோபி கல்யாணம் பற்றி ஈஸ்வரியிடம் சொல்ல, அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி, இனியாவை அழைத்து கொண்டு மண்டபத்திற்கு வருகிறார். மண்டபத்தில் மனதை கல்லாகி கொண்டு பாக்கியா சமையல் வேலைகளை கவனிக்கிறார்.
கோபி ராதிகாவும் மணமக்கள் கோலத்தில் மேடைக்கு வர, மறுபக்கம் ஈஸ்வரி ஆட்டோவில் வேகமாக மண்டபத்திற்கு வருகிறார். அவர் மண்டபம் வாசலுக்கு வரும் சமயத்தில், கோபி ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார். ஈஸ்வரி கோபி என சத்தம் போட, கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். நீ இப்படி எல்லாம் செய்வாய் என கனவில் கூட நினைக்கவில்லை என ஈஸ்வரி சொல்கிறார். நீ எல்லாம் நல்லாவே இருக்கமாட்டாய் என ராமமூர்த்தி பொருள்களை அவர்கள் மீது வீசி அடிக்கிறார்.
அஜித்தின் “துணிவு” படத்தில் களமிறங்கும் விஜய் டிவியின் பிரபல ஜோடி – வைரலாகும் தகவல்!
Exams Daily Mobile App Download
உடனே கோபி நீங்க என்ன சாபம் கொடுத்தாலும் நாங்க நன்றாக இருப்போம் என சொல்ல, உடனே ஈஸ்வரி எப்படிடா நல்லா இருப்பீங்க என கேட்கிறார். பின் கோபி அம்மா என கூப்பிட, இனிமேல் என்னை அப்படி கூப்பிடாதே, நான் உன்னை தலை முழுகிவிட்டேன் என ஈஸ்வரி சொல்ல, கோபியும் ராதிகாவும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது பாக்கியா வர, இனியா அம்மா என கட்டி அணைத்து அழுகிறாள். உடனே ஈஸ்வரி இனிமேல் என் மருமகளுக்கும் என் பேரப்பிள்ளைகளுக்கும் நாங்க இருக்கோம் என சொல்லி அழைத்து செல்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்