பாரதி கண்ணம்மா சீரியலுக்கு விடிவுகாலம்.. DNA டெஸ்ட் எடுக்க போகும் பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி மற்றும் கண்ணம்மா வேலை பார்க்கும் மருத்துவமனையில், ஒரு நபர் இது தனக்கு பிறந்த குழந்தை இல்லை என சொல்ல, பாரதி அவரை DNA டெஸ்ட் எடுத்து பார்க்க சொல்கிறார். அதனால் கண்ணம்மா அவருக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா என கேட்க, பாரதி DNA டெஸ்ட் எடுத்து பார்க்க முடிவு செய்கிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தான் டைரக்டர் கதைக்கு திரும்பி இருக்கிறார். இத்தனை நாள் கண்ணம்மா மீது வெறுப்புடன் இருந்த பாரதி மனம் மாறுவது போல காட்டப்பட்டு வருகிறது. ஸ்கூலில் நான் லக்ஷ்மிக்கு அப்பா மாதிரி என பாரதி சொல்வதால் அவரின் மனம் மாறும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்துள்ளது. இதற்கிடையே தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது, அதில் பாரதி மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறக்கிறது.
ஆனால் அவருடைய கணவர் அந்த குழந்தை தன்னுடையது இல்லை என சொல்லி, சண்டை போடுகிறார். உடனே கண்ணம்மா வந்து சமாதானம் சொல்ல அவர் கேட்பதாக இல்லை. அந்த நேரம் பார்த்து பாரதி அங்கே வர அவரிடம் இது தன்னுடைய குழந்தை இல்லை என அந்த நபர் சொல்கிறார். உடனே பாரதி இது உங்களுடைய குழந்தையா என தெரிந்து கொள்ள DNA டெஸ்ட் எடுப்பது தான் ஒரே வழி என சொல்கிறார். அதை கேட்டு கண்ணம்மா எல்லாருக்கும் ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா என கேட்கிறார்.
திருமணத்தை நிறுத்தி கோபியை அழைத்து வரும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் ராதிகா! Unexpected Twist!
Exams Daily Mobile App Download
நீங்க எப்போது DNA டெஸ்ட் எடுக்க போறீங்க என கேட்க ஆனால் பாரதி அவரிடம் பதில் பேசவில்லை. இந்நிலையில் பாரதியின் மனசாட்சி நீ ஒரு DNA டெஸ்ட் எடுத்தால் தான் என்ன என கேட்க, அதனால் பாரதி DNA டெஸ்ட் எடுக்க முடிவு செய்கிறார். இதெல்லாம் அடுத்த வார எபிசோடில் காட்டப்பட இருக்கிறது. இதற்கிடையே பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்வேன் என வாக்கு கொடுத்ததால், உண்மை அதற்கு முன்னதாக தெரிய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
பாரதி DNA test செய்தால் உண்மை தெரிய வரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் கண்ணம்மா மீது வெண்பா அபாண்டமான பழியை சுமத்தியுள்ளார் என்பது தெரியவேண்டாமா. ஒருசமயம் அந்த அடியாள் தன் செல்போனில் வெண்பா வேலைக்கார பெண்ணிடம் கண்ணம்மா மீது நான்தான் இப்படி ஒரு பழியை போட்டு பாரதியை நம்பவைத்தேன் என்பது பாரதிக்கு தெரியவேண்டும்.
விஜய் டிவி க்கு தரும் கோரிக்கை தயவுசெய்து பார்வையாளர்களை மீண்டும் இழந்து விடாதீர்கள். அறுவைகளை குறைத்துக் கொள்ளுங்கள்