திருமணத்தை நிறுத்தி கோபியை அழைத்து வரும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் ராதிகா! Unexpected Twist!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் மணமேடையில் கோபியும் ராதிகாவும் திருமணம் செய்து கொள்ள போக ஈஸ்வரியும், இனியாவும் கல்யாணத்தை நிறுத்த வருகின்றனர், அது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் ஈஸ்வரி செய்ய போகும் காரியம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி
பல சிக்கல்களை தாண்டி கோபி ராதிகாவின் கழுத்தில் தாலி கட்ட இருக்கிறார். அவருடைய திருமணத்தில் பாக்கியா சமைக்க இருக்கிறார். இந்நிலையில் ராமமூர்த்தி உடல்நிலை சரி இல்லை என்றாலும் திருமணத்தை நிறுத்த மண்டபம் வருகிறார். ஆனால் கோபி காதல் ஆசையால் அப்பா என பார்க்காமல் அவரை அமணப்படுத்தி அனுப்புகிறார். அதனால் மனம் உடைந்த ராமமூர்த்தி வீட்டிற்கு வந்து ஈஸ்வரியிடம் உண்மையை சொல்கிறார்.
அதை கேட்ட ஈஸ்வரி இனியாவுடன் திருமணத்தை நிறுத்த மண்டபத்திற்கு வருகிறார். அங்கே கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்ட செல்ல அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி கல்யாணத்தை நிறுத்த சொல்கிறார். பாக்கியா நடப்பது எதுவும் தெரியாமல் சமைத்து கொண்டிருக்க, ஈஸ்வரியின் குரல் கேட்டு மேலே இருந்து எட்டி பார்க்கிறார். ஈஸ்வரி கோபியிடம் இதெல்லாம் நம்ம குடும்பத்திற்கு சரியாக வராது என சொல்லி தன்னுடன் கிளம்பி வர சொல்கிறார்.
மாற்றம் செய்யப்பட்ட விஜய் டிவி சீரியல்கள் – பிக்பாஸ் சீசன் 6 தொடக்கம்! முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
ஆனால் கோபி ,முடியாது என சொல்ல, நீ வராமல் இருந்தால் என்னை உயிரோடு பார்க்க முடியாது என ஈஸ்வரி மிரட்டுகிறார். மேலும் இனியாவும் டாடி இதெல்லாம் வேண்டாம் என சொல்லி கெஞ்சி அழ, இனியாவின் கண்ணீரை பார்க்க முடியாமல் கோபி மனம் மாறுகிறது. அவர் மேடையில் இருந்து எழுந்துவிட, ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார். அதை எல்லாம் பார்த்து ராதிகா மிகவும் வருத்தப்படுகிறார். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடில் காட்டப்பட இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்