Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்திய அஞ்சல் துறை பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்புத் திருவிழா நடைபெற உள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
செல்வமகள்:
இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம்.
அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம் செல்வமகள் திட்டத்தில் 7.6 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்களும் இத்திட்டத்தில் கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தில் பிரிவு 80-சி ன் படி வருமான வரி விலக்கு சலுகையும் கிடைக்கிறது. இத்திட்டத்தின் முடிவில் 50 சதவீத தொகையை குழந்தைகளின் மேற்படிப்பிற்காக எடுத்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மீத தொகையை திருமணத்தின் போது பெறலாம்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் அக்டோபர் 11ம் தேதி வரை செல்வமகள் சேமிப்புத் திருவிழா நடைபெற உள்ளது. இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரும் தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Hii mam contact number send me mam