கோபியை விட வேலை தான் முக்கியம் என்ற பாக்கியா; அதிர்ச்சியில் குடும்பத்தினர்! – பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது மிகவும் பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பாக்கியாவின் குடும்பத்தினர் யாரும் எதிர்பார்க்காத ஒரு முக்கிய திருப்பம் நடக்க உள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக மாறி இன்று இறுதியாக கோபி மற்றும் ராதிகா இருவரும் மண மேடை வரை சென்று விட்டனர். இதில் அதிர்ச்சி என்னவென்றால் பாக்கியா சமையல் போட்டியில் வென்றதன் மூலம் கிடைத்த மிகப்பெரிய முதல் ஆர்டர் ராதிகா மற்றும் கோபியின் திருமண சமையல் ஆர்டர் தான். ஆனால் யார் திருமணத்திற்காக சமையல் செய்கிறோம் என்பதை முன்னதாக பாக்கியா தெரிந்து கொள்ளவில்லை.
ஆனால் ஒரு வழியாக இந்த உண்மை பாக்கியாவிற்கு தெரியும் நேரம் வந்து விட்டது. கோபி நல்லபிள்ளை போன்று தனது அம்மாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்க வருகிறார். ஆரம்பத்தில் மிகவும் பாசமாக பேசி வந்த ஈஸ்வரி அம்மா ராதிகாவுடன் திருமணம் என்ற வார்த்தையை கேட்ட உடன் மிகவும் கோபமடைந்து கோபியை திட்டி விடுகிறார். மேலும், இந்த கல்யாணம் எப்படி நடக்கிறது என்று பார்க்கிறேன் என்றும் சாபம் கொடுக்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால், ராமமூர்த்தி மண்டபத்தில் இருக்கும் பாக்கியாவிற்கு எப்படி விஷயம் தெரியாமல் இருக்கிறது என்று குழப்பம் அடைகிறார். இதனால் பாக்கியாவை அந்த இடத்தில இருந்து கூட்டி வர கிளம்புகிறார். விஷயம் தெரிந்த பாக்கியா, இந்த சமையல் ஆர்டர் என்னை நம்பி கொடுத்தது. அதனால் எனக்கு இந்த வேலை தான் முக்கியம் என்று சொல்கிறார். மேலும், கோபி நம்மை பிடிக்காமல் தானே விட்டு சென்றுள்ளார். அதனால் அவரை கட்டாயப்படுத்தி கூட்டி செல்ல முடியாது என்று பாக்கியா சமையல் வேலையை கவனிக்கிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்