மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான அரிய வாய்ப்பு!
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பபதிவு கடந்த 12ம் தேதி தொடங்கி ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தற்போது விண்ணப்ப பதிவிற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தில் திருத்தம்:
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நுழைவுத் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தற்போது கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை – மாநகராட்சியின் முக்கிய அறிவுரை!
மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் எம்.பி. பி. எஸ் படிப்பிற்கான விண்ணப்பபதிவு நடந்து வருகிறது. மேலும்,கடந்த 12ம் தேதி கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பபதிவு தொடங்கியது. செப்டம்பர் 26ம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கால்நடை மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு இந்த ஆண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த 26ம் தேதியுடன் விண்ணப்பபதிவுகள் முடிவடைந்த நிலையில் தற்போது விண்ணப்பதாரர்கள் அவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது அக்டோபர் 3 ம் தேதி இரவு 8 மணி முதல் அக்டோபர் 6 ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பத்தில் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொண்டு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் திருத்தங்கள் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்