தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை – மாநகராட்சியின் முக்கிய அறிவுரை!

0
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - மாநகராட்சியின் முக்கிய அறிவுரை!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - மாநகராட்சியின் முக்கிய அறிவுரை!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை – மாநகராட்சியின் முக்கிய அறிவுரை!

தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி சார்பாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் மழை நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனால் அதிகளவும் கொசு உண்டாகி காய்ச்சல் பரவுவதற்கு வழி வகை உண்டாகிறது. அதனால் தற்போது கொசு மூலமாக பரவும் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மாநகராட்சி சார்பாக பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகிறது.

இனி தப்பா Type பண்ணாலும்  பிரச்சனை இல்ல – Twitter பயனர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட்!

இதில் முதலாவதாக சமீப நாட்களாக மழை பெய்து வருவதால் வீட்டிற்கு அருகில் இருக்கும் பயன்படுத்தப்படாத டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உண்டாகும் என்பதால் இதனை உடனே அகற்றி விட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளான குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் புகை பரப்பும் இயந்திரங்கள் மூலமாக கொசுக்களை ஒழிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த இடங்களில் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும் அத்துடன் மாலை 6 மணி முதல் 7.30 வரையிலும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒலிப்பான் தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வார்டுக்கும் 2 பணியாளர்கள் மழைநீர் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஒவ்வொரு வீடுகளுக்கு சென்று மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியாளர்களின் பணிகளை செய்ய பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநகராட்சி சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!