கேட்டாலே தலை சுத்துது.. தீபாவளி வரும் நேரத்தில் எக்குத்தப்பாய் உயர்ந்த தங்கத்தின் விலை!
சில நாட்களாக குறைந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கம் விலை:
பொதுவாகவே இந்திய மக்கள் தங்கம் வாங்குவதை ஒரு நல்ல முதலீடாக கருதுகின்றனர். இதற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறுவது ஒரு முக்கிய காரணம். மேலும் ஆபத்து காலங்களில் கையில் பணம் இல்லாத சமயம் தங்கத்தை அடமானம் வைத்து சாமானிய மக்கள் பணத்தை ஏற்பாடு செய்கின்றனர். இவ்வாறு மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக தங்கம் திகழ்கிறது.
சில நாட்களுக்கு முன்பு வரை இறங்கு முகமாக சென்ற தங்கம் விலை தற்போது ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக இனி வரும் நாட்கள் ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி என இருப்பதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (29-09-2022) வெளியாகி உள்ள தங்க விலை நிலவரம் அனைவருக்கும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கி விடுமுறையா? காரணம் இது தான்!! இதை உடனே பாருங்க!
Exams Daily Mobile App Download
அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.4,680 க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.37,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 காசுகள் அதிகரித்து ரூ.61.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்