தமிழக விரிவுரையாளர் பணி நியமன ஆணை – முதல்வர் வழங்கல்!
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதற்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.
அரசு பணி நியமனம்:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனாவின் தாக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அரசு பணிக்கான தேர்வுகள் எதுவும் கடந்த ஆண்டு வரை நடத்தப்படவில்லை. இதனால் அரசு பணிக்கான காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மேலும், அரசு பணிக்கு தயாராகி வரும் பட்டதாரிகள் அனைவரும் அரசு விரைவில் பணிக்கான தேர்வுகளை நடத்தி, பணி நியமனத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி அன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், விரிவுரையாளர் பணிக்கான 1024 காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டது. ஆனால் தொடர்ந்து கொரோனா கால ஊரடங்கு காரணமாக இப்பணிக்கான தேர்வுகள் 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. தேர்வில் கலந்து கொண்டவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.
மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – முதல்வர் அளித்த வாக்குறுதி!
Exams Daily Mobile App Download
தற்போது தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனத்தை முதல்வர் கையால் வழங்கும் விழா இன்று தலைமை செயலகத்தில் நடந்தது. 1024 பணியாளர்களில் முதல்வர் 11 நபர்களுக்கு தன் கையால் பணி ஆணையை வழங்கினார். இந்த விழாவில் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்