மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – முதல்வர் அளித்த வாக்குறுதி!
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்துறை ஊழியர்கள் போராட்டம்:
மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், யூனியன் பிரதேசங்களில் இயங்கி வரும் மின்சார துறையை தனியார் மயமாக்குவது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்து, அது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இது குறித்த அறிக்கை மத்திய அரசிற்கும் அனுப்பப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தால் புதிதாக பொறுப்பேற்ற என்ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணி அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.
Exams Daily Mobile App Download
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள முக்கிய இயக்கம்? – காவல் துறையினர் உஷார் நிலை!
அதனால் மீண்டும் ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்த தொடங்கினார்கள். அதனால் மின்சார துறையில் உள்ள பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில், மின்சார துறையை தனியார் மயமாக்குவது குறித்து தொழிற்சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்யமாட்டோம் என தெரிவித்துள்ளார். அதன் பின் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்