5ஜி சேவை இவ்வளவு மலிவான விலையிலா? – ஆச்சரியப்படுத்தும் தகவல்!
இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இதற்கான கட்டணம் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
5ஜி சேவை:
பலகட்ட சோதனைகளுக்கு பிறகு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்தியாவில் 5 ஜி சேவைகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. முன்னதாக நாட்டின் முன்னனி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தான் இந்த சேவையை வழங்க இருக்கின்றது. ஆரம்பத்தில் 4ஜி சேவைகளை விட 5 ஜி சேவைக்கு அதிக அளவில் விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சாமானியர்கள் இதனை பயன்படுத்த தயங்கும் நிலை ஏற்படும்.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தற்போது 5ஜி சேவையின் விலை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக, 5ஜி சேவை 20% அதிக விலையில் தான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. நிபுணர்களின் கருத்து படி, 5ஜி சேவையின் விலையானது 4ஜி யின் விலை அளவிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் நாளை (செப்.27) “இந்த” பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!!
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே பொது அறிக்கையில் இன்னும் 5ஜி சேவை விலையை அறிவிக்கவில்லை. தற்போதுள்ள 4ஜி சேவையின் விலையிலேயே 5ஜி கட்டணத்தை நிர்ணயிப்பதால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உடனடியாக 5ஜி சேவைக்கு மாறுவார்கள் என்பது நிறுவனத்தின் உத்தியாக உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்