தமிழகத்தில் நாளை (செப்.27) “இந்த” பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளையில் இருக்கும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
மின்தடை
தமிழகத்தில் மின் கம்பங்களில் உண்டாகும் பழுதுகளை உடனடியாக சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளை முடிப்பதற்காக மின்தடை செய்யப்படுகிறது.. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் மின்வாரியம் செயல்படுத்துகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் விபத்துகள் ஏற்படும் விகிதமும் வெகுவாக குறைந்துள்ளது.
அதனால் இதனை மின்வாரியம் முறையாக மாதந்தோறும் பின்பற்றி வருகிறது. அந்த வகையில் நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளையில் இருக்கும் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை திருக்குவளை துணை மின் நிலையத்தில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என நாகை தெற்கு உபகோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
IRCTC வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை – ரயில் பயணிகளின் கவனத்திற்கு!
இதையடுத்து திருக்குவளை துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, கே.கே. நகா், சமத்துவபுரம், திருக்குவளை கடைத்தெரு, காருகுடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் எனவும் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல் மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் அதனால் இப்பகுதியில் இருக்கும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்