12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான Data Entry Operator காலிப்பணியிடங்கள் – அறிய வாய்ப்பை தவறவிடாதீர்!
திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர் நிதிக்குழுமம் ஆனது Assistant Cum Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர் நிதிக்குழுமம் |
பணியின் பெயர் | Assistant Cum Data Entry Operator |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 15 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர் நிதிக்குழும காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Cum Data Entry Operator பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Data Entry Operator கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கணினி தொழில்நுட்ப சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குவதில் ஒரு ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர் நிதிக்குழும வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் சூப்பர் வாய்ப்பு !
Data Entry Operator ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர் நிதிக்குழும தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
4C10 , 4 வது தளம் ‘C’ பிளாக்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
திருப்பத்தூர்.
Download Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்