தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை கட்ட முடியாது – கிளம்பும் எதிப்புகள்! வலுக்கும் கோரிக்கை!
தமிழக மின் வாரியத்தின் கடனை சமாளிக்க மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தை அரசு மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளது.
மின் கட்டணம்:
தமிழக மின்வாரியம் ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் கடனில் இயங்கி வருகிறது. அதனால் மின் கட்டணத்தை உயர்த்த கோரி மத்திய அரசு பல முறை தமிழக மின் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு தமிழக மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலித்து புதிய கட்டண உயர்வை அறிவித்தது. இதற்கு ஒழுங்குமுறை ஆணையமும் ஒப்புதல் அளித்த நிலையில் திருத்தப்பட்ட மின் கட்டணம் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
UPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – ESE நேர்காணல் தேதி வெளியீடு !
Exams Daily Mobile App Download
ஏற்கனவே மக்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்கும் என்று கூறி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது மின் கட்டணம் உயத்தப்பட்டாலும் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவே மின்சாரம் வழங்கப்படும். மேலும் குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட தொழில்களுக்கான மானிய விலை மின்சாரம் தொடரும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விசைத்தறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு விசைத்தறிகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை, அரசு மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பரிசீலனை செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இதனை வலியுறுத்தி நாளை முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது உற்பத்தியை நிறுத்தினால் ஒரு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள் அதனால் மின் கட்டண உயர்விலிருந்து விசைத்தறிகளுக்கு விலக்களிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்