தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் மாணவர்கள் மறு கூட்டலுகளுக்கு விண்ணப்பித்தனர். தற்போது மறுகூட்டல் முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணவுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகு 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2021 – 2022 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியானது. இதில் தேர்வு எழுதிய 9,12,620 மாணவர்களில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வில் பங்கு பெறாதவர்களுக்கு துணை தேர்வு நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டது. இதனையடுத்து மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் இ-சேவை மையம் வாயிலாகவும் விண்ணப்பித்தனர்.
உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர தடை – ஒன்றிய அரசு கைவிரிப்பு!
அடுத்த கட்டமாக தேர்வானது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் 23ம் தேதி http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேர்வு துறை தெரிவித்தது .இந்த தேர்வு முடிவுகளில் சந்தேகம் உள்ளவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்தது.
Exams Daily Mobile App Download
மேலும் கடந்த ஆகஸ்ட் 24, 25 ஆகிய 2 தேதிகளில் மாணவர்கள் பள்ளிகள் வாயிலாக மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தனர். ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் மறுகூட்டல் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்