தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டில் நின்று பயணம் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்வது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
படியில் பயணம்:
தமிழகத்தில் மாணவர்கள் காலை நேரங்களில் தங்களது இருப்பிடத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். பொதுவாக காலை நேரம் என்றாலே மக்கள் பணிக்கு செல்வது, மாணவர்கள் கல்வி நிலையத்திற்கு செல்வதால் எல்லா பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்படும். இந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் கூட்டமான பேருந்துகளில் படியில் நின்று பயணிக்கின்றனர். இது பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மாணவர்கள் இவ்வாறு படியில் பயணிப்பதால் விபத்தும் ஏற்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என தெரிவித்தும், பாதுகாப்பான முறையில் சென்று வருவது குறித்தும் போக்குவரத்து துறை, காவல்துறை மற்றும் நல சங்கம் மற்றும் கல்வித் துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது மாதிரியான செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!
இதனை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பாதுகாப்பாக சென்று வர அனைத்து துறை கள அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துத் துறை ஆகிய தொடர்புடைய அலுவலர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீதும் விதி மீறல்களில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்கள் அனுமதி சீட்டு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்