தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!

0
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகப் பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

வானிலை தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து லேசான மழை முதல் கனமழை வரை பெய்து கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது சென்னை வானிலை மையம் இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாளை நீலகிரி, கோவை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 மாவட்டத்திலும் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 5 மாநிலங்களில் சூறாவளியுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இதனை தொடர்ந்து நாளை மறுநாள் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இதையடுத்து குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!