தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில் மதுரையில் 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சோகம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து நிருபர்களிடம் பேசியுள்ளார்.

டெங்கு காய்ச்சல்:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதிலிருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் திணறி வரும் வேளையில் அடுத்த தாக்குதலாக குரங்கு அம்மை அச்சறுத்தல் ஏற்பட்டது. அதற்கான தடுப்பு பணிகள் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மாதிரிகள் எடுப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழைக் காலங்கள்தோறும் டெங்கு காய்ச்சல் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் கொசு மூலம் இந்த டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீருக்காக தோண்டப்பட்ட குழிகள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் கழிவு நீரில் உள்ள கொசுக்கள் வாயிலாகவும் டெங்கு பரவுகிறது. தலைவலி, உடல் வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்கு பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். கடந்த 2017, 2018 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மீண்டும் பரவி வரும் ஓமிக்ரான் தொற்று – மருத்துவர்கள் எச்சரிக்கை!

இந்த நிலையில் சுகாதாரத்துறை பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக டெங்குவின் தீவுரம் குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் மீண்டும் டெங்கு பரவுவதாக தகவல்கள் வந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் 50 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட அரசின் 3 துறைகள் இணைந்து பணியாற்றி வருவதாகவும், எந்த பகுதியிலும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!