அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் அறிவிப்பு – கேரள அரசின் ஜாக்பாட் திட்டம்!
கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அம்மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு அலவன்ஸ்:
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படும். தொடர்ந்து 10 நாட்களுக்கு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகை விஷ்ணுவின் பிறந்தநாள் என்றும் வாமணன் அவதரித்த நாள் என்றும் கூறப்படுகிறது. இந்த விழா காலத்தில் கேரளாவில் படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த பண்டிகை கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி ஆண்டுதோறும் இதைக் கேரளாவின் அறுவடைத் திருநாள் என்றும் கூறுவர்.
இப்பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அதாவது ஓணம் பண்டிகை போனசாக ரூ.4000 வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போனஸ் பெற தகுதி பெறாத அரசு ஊழியர்களுக்கு 2750 ரூபாய் ஓணம் பண்டிகை போனஸ் தொகையாக வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : ஆபரண தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
அதனை தொடர்ந்து ஓய்வூதியதாரர்களுக்கு ஓணம் சிறப்பு பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும். அதே போல அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஊதியத்திலிருந்து சுமார் 20000 ரூபாயை பண்டிகைக் கால முன் பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் பகுதி நேர மற்றும் தற்காலிக ஊழியர்கள் 6000 ரூபாயை முன் பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து அம்மாநில அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை கால செலவை சமாளிக்க இந்த தொகை ஊழியர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்