சென்னை : ஆபரண தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் குறைந்து வந்த நிலையில் இன்று என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. அதனால் தங்கத்தை எந்த நேரத்தில் வாங்கினால் லாபகரமானதாக இருக்கும் என்று நகைப்பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அனைவரும் தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். அதனால் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த வந்த நிலையில் இன்று யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்த அதிரடி உயர்வுக்கு கடந்த ஜூலையில் தங்கத்தின் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதன்படி கடந்த 12ம் தேதி அன்று தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை நெருங்கியது. அதாவது 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.39,120க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களில் படிப்படியாக 39 ஆயிரத்திற்கு குறைய தொடங்கியது. இந்த நிலையில் இன்று என்றும் இல்லாத அளவுக்கு அதிரடி உயர்வை கண்டுள்ளது. அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் அறிமுகம் – முக்கிய அறிவிப்பு!
சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.38,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.4,790க்கு விற்பனையாகிறது. இதனை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60.10க்கும் அத்துடன் ஒரு கிலோ ரூ.6010க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு, பண வீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்