முகக்கவசம் அணியவில்லையெனில் ரூ.500 அபராதம் – அரசு திடீர் அறிவிப்பு!
டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வீதம் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லையெனில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம்:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது. அதிலும், குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அதிலும் தற்போது சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை தினங்கள் வர இருப்பதால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்தியாவில் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் 16,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் இறப்பு வீதமும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 53 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இதனால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
TNPSC Group I தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
அதே நேரத்தில், டெல்லியிலும் சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பரவல் வீதம் அதிகரித்து வருவதால் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்றால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற ஊழியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வழக்கறிஞர்கள் விசாரணையின் போதும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.